Tuesday, March 10, 2015

காண்பேன்...

கொஞ்சம் சண்டை போட
நிறைய புலம்பித் தீர்க்க
பிடித்ததை ரசித்து பகிர
ஏட்டிக்கு போட்டி ஆணவம் காட்ட

நீ இல்லாத இந்த நாட்கள்
வெறுமையின் இருப்பிடமாய்
உயிர்ப்பில்லாத உடல் பிண்டமாய்
வலியின் இடம் அறியாத குடைச்சலாய் உள்ளன

வலிய சிரித்து வலிய பேசி
காரணமற்ற சிடுசிடுப்புக்கு நடுவில் கொஞ்சம் சந்தோஷமாக இருக்க முயன்றிருக்கிறேன்

உன் விழிகளால் மறுபடியும் என்னை காண்பேன் என்ற நம்பிக்கையோடு ...

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Kadhal endra varthai dhaan ellai aanal ovvoru ezhuthugalilum kadhal niraivai ullan .sooooper sri

    ReplyDelete